It is for curing most of your body ailments like joint pain by it's abundant healing nature.
mudavattukal
முடக்குவாதத்தையும் மூட்டுவலியையும் நிச்சயம் குறைக்கும் முடவாட்டுக்கால் சூப்.
மூட்டுவலியால் முடங்கி கிடப்பவர்களை வேகமாக எழுந்து ஓட வைக்கும் அளவுக்கு செய்யகூடியது முடவாட்டுக்கால். முடவாட்டுக்கால் சூப் முடக்குவாதத்துக்கு தீர்வளிப்பதை தான் பார்க்க போகிறோம்.
முடக்குவாதம் வந்து முடங்கியவர்கள் இந்த சூப் குடித்துவந்தால் முடக்குவாதம் குணமாகும்.
முடவாட்டுக்கால் சூப் எடுத்துகொள்வதன் மூலம் மூட்டு வலி வராமலே தவிர்க்க முடியும்.
முடவாட்டுக்கால் சூப் ஐ சைவ ஆட்டுக்கால் சூப் என்று அழைக்கிறார்கள். முடவன் ஆட்டுக்கால் தான் முடவாட்டுக்கால் என்றழைக்கப்படுகின்றது.
இது தாவரத்தின் கிழங்கு ஆகும். மலைப்பகுதிகளில் மட்டும் விளையக்கூடியது.
மலைக்காடுகளில் உள்ள பாறைகள், மரங்களின் மீது மட்டுமே வளரக்கூடியது. இது கொல்லிமலையிலும் சேர்வராயன் மலையிலும் கிடைக்கிறது . இந்த முடவாட்டுக்கால் கிழங்கிற்கு வேர்கள் கிடையாது. பாறைகளில் விளையக்கூடிய இவை செம்பு, தங்கம், இரும்பு, கால்சியம் மற்றும் பாறைகளில் இருக்கும் சிலிக்காவை உறிஞ்சும் தன்மை கொண்டது.
சித்தர்கள் வாதம், பித்தம், கபம் என்னும் நோயை விரட்ட இதை ஒரு மண்டலம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும் என்கிறார்கள்.