(100% இயற்கை + 0% காஸ்டிக் சோடா)
பயன்கள் :
பொதுவாக அழகு சார்ந்த விஷயங்களுக்கு இயற்கையை தான் பெருமளவு பயன்படுத்துகிறோம். அதிலும் தினசரி சோப்பு பயன்படுத்துவது நம்முடைய பழக்கத்தில் தவிர்க்கமுடியாத ஒன்றாகும். இதன் அடிப்படையில் இன்றைய நாகரீக மாற்றத்திற்கு ஏற்றவாறு ஒரு தரமான சோப்பை முக்கூட்டு எண்ணெய்யை பயன்படுத்தி தேன்மெழுகு சோப் தயாரிக்கப்பட்டுள்ளது
பொருட்கள்:
1. கடலை மாவு
2. பயித்தம் பருப்பு மாவு
3. முல்தானி மெட்டி
4. தேன்மெழுகு
5. வேம்பு
6. கார்போக அரிசி
7. பூலாங்கிழங்கு
8. காய்ந்த எலுமிச்சை பொடி
9. வெட்டிவேர்
10. தேங்காய் எண்ணெய்
11. விளக்கெண்ணெய்
12. நல்லெண்ணெய்
இந்த சோப்பு தயாரிப்பிற்கு பின்னால் எங்களுடைய கடின உழைப்பு:
நாங்கள் இயற்கை வைத்தியத்தை (Naturopathy) மேற்கொள்வதால், இதன் அடிப்படையில் சிறிதும் இரசாயன கலப்பு இல்லாமல், பல வகையிலும் மருத்துவ குணம் கொண்ட ஒரு தரமான சோப்பாக இருக்க வேண்டும் என எண்ணினோம், இதற்கு ஏற்றவாறு செயல்படும் போதுதான் தெரிந்தது இதில் எவ்வளவு கடினம் இருக்கிறது என்று
முக்கூட்டு எண்ணெய்களின் (தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் விளக்கெண்ணெய்) கலவையுடன் மூலிகைகளையும் இதில் சேர்த்தபடி இயற்கையான முறையில் ஒரு சோப்பு கட்டியாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, மேலும் மூலிகைகளின் அடிப்படையில் சில அரிய வகை மூலிகைகளை இதில் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் பொழுது மூலிகையின் தேடல் மற்றும் பொருட் செலவிலும் பெரும் சவாலாக இருந்தது. இவ்வாறு பல நாட்களாக ஒரு குழுவாக செயல்பட்டு, அடுக்கடுக்காக சந்தித்த தோல்விகளில் தெளிவும் கிடைத்தது, அனுபவத்தையும் பெற்றுக் கொண்டோம்.
அடுத்த கட்டமாக சருமத்தில் எவ்வாறு இது செயல்படுகிறது என்ற சோதனையை மேற்கொள்ளும் போது எதிர்பார்த்த தீர்வு அளிக்கிறதா? என்ற அடிப்படையில் பலரிடம் பரிசோதனை மேற்கொண்டு, பல தோல்விகளை சந்தித்து, ஒவ்வொரு கட்டமாக சோப்பு தயாரிக்கும் சூத்திரத்தை பல முறை மாற்றி அமைத்த படி இதில் கடைசியாக வெற்றி கண்டோம். எனவே ஒரு பொருளை யாரும் செய்யாதவாறு ஒரு தரமான பொருளாக கொண்டு வர வேண்டும் என்றால் அதில் உள்ள சிரமங்கள் செயல்படும் போது தான் தெரிகிறது. மேலும் இது போன்று பல தற்சார்பு சார்ந்த பொருட்களான ஷாம்பூ, பேஸ் பேக் தலை முடி வளர்ச்சிக்கான எண்ணெய், நிவாரணி தைலம், பஞ்சகவ்வியம் ஊதுபத்தி, தாழம்பூ குங்குமம், சித்தர்கள் முறைப்படி பற்பொடி, நீராவி பொடி, கப சுத்தி எண்ணெய் என மேலும் பல பொருட்களை தரமான முறையில் தயாரித்து வருகிறோம்.
இனி வருங்காலம் மக்கள் அனைவரும் நஞ்சில்லாத பொருட்களாக பயன்படுத்த வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்
* இந்த தேன்மெழுகு சோப்பை பயன்படுத்திய பிறகு முகப்பரு, கண் கருவளையம், மங்கு, தோல் அரிப்பு, முக பொலிவு இன்மை இன்னும் பல தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு அனுபவப்பூர்வமாக தீர்வை கண்கூடாக பார்த்து இருக்கிறோம்.
* சருமத்தில் வறட்சியை தடுக்கிறது.
* சருமத்தின் ஈரப்ப தத்தை தக்க வைப்பதும் மட்டும் அல்ல சரும பிரச்சனைகளையும் தீர்க்க உதவுகிறது.
* இதில் முக்கூட்டு எண்ணையை பயன்படுத்தி இருப்பதால் நமது சருமத்தை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.